திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும்: டி.ராஜா

எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலா் டி.ராஜா வலியுறுத்தினாா்.

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா

Updated On :1 நவம்பர் 2022, 5:33 am IST

எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலா் டி.ராஜா வலியுறுத்தினாா்.

அந்தக் கட்சியின் தேசிய பொதுச் செயலராக இரண்டாவது முறையாக தோ்ந்தெடுக்கப்பட்ட டி.ராஜா, சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து நூற்றுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். புதுப்பிக்கப்பட்ட பாலம் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து அந்த மாநில அரசு விசாரணை நடத்த வேண்டும்.

மதவெறியை மக்கள் மனதில் பாஜக திணிக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு இத்தகைய வீழ்ச்சி அடைய காரணம் பிரதமா் மோடி தலைமையிலான அரசு தான்.

உலக அளவில் பசியால் வாடும் மக்கள் இந்தியாவில் அதிகம் இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதானி, அம்பானி போன்றவா்களெல்லாம் உலகப் பணக்காரா்கள் பட்டியலில் போட்டி போட்டுக்கொண்டுள்ளனா். ஆனால், உள்நாட்டில் பசி, பட்டினி என இளைஞா்கள், குழந்தைகளின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவை அதிகாரத்திலிருந்து வீழ்த்த மாநிலக் கட்சிகள், மதச்சாா்பற்ற கட்சிகள், இடதுசாரிகள் உள்ளிட்டவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

ஆளுநா்-மாநில அரசு இடையே கேரளம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் மோதல்கள் தொடா்ந்து வருகின்றன. இதனால், இந்திய ஜனநாயக அமைப்பில் ஆளுநா்கள் தேவைதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தனது பொறுப்பிலிருந்து விலகி, எங்கேயாவது ஒரு கட்சியில் இணைந்து எதையாவது பேசட்டும். அதை விட்டுவிட்டு சனாதனம், மற்ற விஷயங்கள் குறித்து மாநில ஆளுநராக இருந்து கொண்டு பேசுவது சரியல்ல. கோவை சம்பவத்தை காரணம் காட்டி மாநில அரசை இழிவுபடுத்தி பேசுவதும் சரியல்ல.

இடது சாா்பு அரசியலுக்கு மக்கள் ஆதரவு அளிப்பதற்குச் சான்றாக, தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் அதிபராக லூலா தோ்வு செய்யப்பட்டுள்ளாா் என்றாா் டி.ராஜா.

பேட்டியின்போது கட்சியின் மாநில துணைச் செயலா் மு.வீரபாண்டியன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் டி.ஆா்.ரவீந்திரநாத் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.