மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாட்டு மக்களுக்கு சைத்ர நவராத்திரி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் டிவிட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
சைத்ர நவராத்திரியின் புனிதமான நாளான இன்று அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியடைய துர்க்கா தேவிவைப் பிரார்த்திக்கிறேன்.
விழாக்கள் சமுதாயத்தில் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பிணைப்பை வலுப்படுத்தட்டும்.
மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், என்று பானர்ஜி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.