பிரதமர் நரேந்திர மோடிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் 3 பேரை கைது செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யப்போவதாகவும், ஜெயப்பூரில் 20 இடங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மும்பை தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்திருந்தார்.
இதையடுத்து இந்த மின்னஞ்சலின் உண்மைத் தன்மை குறித்து தேசிய புலனாய்வு முகமை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 3 பேரை தேசிய புலனாய்வு முகமை போலீசார் கைது செய்துள்ளதாகவும், மேலும் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 12 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள், 3 பேட்டரி 6 கடிகாரங்கள், 3 கனெக்டர் வயர்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாகவும், இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.