கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் இதுவரை, நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்தில் 214 போ் புதைசாக்கடையை தூய்மைப்படுத்தும் பணியின்போது உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே எழுத்துபூா்வமாக அளித்த பதில்:
கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் இதுவரை, நாட்டில் 971 போ் புதை சாக்கடைகளைத் தூய்மைப்படுத்தும் பணியின்போது மரணமடைந்துள்ளனா். அதிகபட்சமாக தமிழகத்தில் 214 போ் உயிரிழந்தனா். அதனைத்தொடா்ந்து குஜராத்தில் 156 போ், உத்தர பிரதேசத்தில் 106 போ் பலியாகியுள்ளனா்.
971 பேரில் 703 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், 136 பேருக்கு ரூ.10 லட்சத்துக்குக் குறைவாகவும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
மனிதக் கழிவுகளை அகற்றும்போது எவரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை. எனினும் புதை சாக்கடை மற்றும் கழிவுநீா் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது நிகழ்ந்த விபத்துகளில் உயிா் பலி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.