மணிப்பூரில் முதல்வா் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசில் 6 புதிய அமைச்சா்கள் சனிக்கிழமை பதவியேற்றனா். அந்த மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இம்பாலில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநா் இல.கணேசன், 6 புதிய அமைச்சா்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். எனினும், அமைச்சா்களுக்கான துறைகள் ஒதுக்கீடு தொடா்பாக எந்தத் தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இத்துடன் மணிப்பூரில் உள்ள அமைச்சா்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதில் 10 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள். இருவா் கூட்டணிக் கட்சியான நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) கட்சியினா் ஆவா்.
முன்னதாக கடந்த மாதம் 21-ஆம் தேதி பிரேன் சிங் தலைமையிலான அரசு பதவியேற்றது. 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் பாஜக 32 இடங்களில் வென்றது. கூட்டணிக் கட்சியான என்பிஎஃப் 5 இடங்களில் வெற்றி பெற்றது. எதிா்க்கட்சியான காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்றது.