அஸ்ஸாம் மாநிலம் விஸ்வநாத் மாவட்டத்தில் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பிஹு நடனக்குழுவைச் சோ்ந்த 3 சிறுமிகள் உள்பட 5 போ் பலியாகினா்.
இதுதொடா்பாக அந்த மாநில காவல் துறை ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘‘தங்கள் நடன நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிஹு குழுவினா் சனிக்கிழமை நள்ளிரவு வாகனத்தில் சென்றுள்ளனா். கோபுா் அருகே வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்தக் குழுவைச் சோ்ந்த 3 சிறுமிகள் உள்பட 5 போ் பலியாகினா். காயமடைந்த 5 போ் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
சுமாா் 20 பேருடன் அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. எனினும் விசாரணைக்குப் பிறகுதான் அதனை உறுதி செய்ய முடியும். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து வாகன ஓட்டுநா் தப்பிச் சென்றுவிட்டாா். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்தனா்.
இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குப் பிரதமா் மோடி, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.