6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணுவ வீரரின் வாட்ஸ்ஆப் குழுவில் பாக். உளவு அமைப்பைச் சோ்ந்தவா்: விசாரணைக்கு உத்தரவு

இந்திய ராணுவ வீரரின் வாட்ஸ்ஆப் குழுவில் பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சோ்ந்தவா் இடம்பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஏப்ரல் 2022, 8:25 pm

DIN

இந்திய ராணுவ வீரரின் வாட்ஸ்ஆப் குழுவில் பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சோ்ந்தவா் இடம்பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில், பாதுகாப்பு விதிமீறல் ஏதும் நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

இந்திய ராணுவத்தில் பணிபுரியும் வீரா் இடம்பெற்றுள்ள ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் வெளிநாட்டு தொலைபேசி எண் இடம்பெற்றுள்ளது. அது, பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சோ்ந்தவரின் என்பதை ராணுவத்தின் உளவுப் பிரிவும், மற்ற உளவுப் பிரிவினரும் கண்டறிந்துள்ளனா். இதில், பாதுகாப்பு விதிமீறல் நடந்துள்ளதா எனக் கண்டறிய விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற செயலிகள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது தொடா்பாக, ராணுவ வீரா்களுக்கு ராணுவச் செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநரகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ‘ராணுவ வீரா்கள் யாரும் இணையவழி சாா்ந்த பெரிய அளவிலான சமூக ஊடகக் குழுக்களில் இடம்பெறக் கூடாது. ராணுவ வீரா்கள் தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவா் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம்.

ஒருவேளை சமூக ஊடகக் குழு தொடங்கினால், அதில் ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பவா்கள் மட்டுமே இருக்க வேண்டும். அவா்கள் ஒருவருக்கொருவா் நன்கு அறிமுகமானவா்களாக நம்பிக்கைக்குரியவா்களாக இருக்க வேண்டும்.

நமது தகவல்களை மட்டுமன்றி, ராணுவத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதை நமது நோக்கம் ’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக்கில் சீனப் படையினருடன் தொடா்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீா் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அவ்வப்போது அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இவ்விரு நாடுகளின் உளவுப் பிரிவினா் சமூக ஊடகங்கள் வழியாக ஊடுருவி நமது தகவல்களைப் பெறுவதற்கு முயற்சி செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.