தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தில்லியின் கல்வி மாதிரியை பஞ்சாப் அரசும் பின்பற்றும்: பகவந்த் மான்

அனைத்து பொருளாதாரப் பின்னணியில் உள்ள மாணவர்களும் தரமான கல்வியைப் பெறும் தில்லியின் கல்வி மாதிரியை பஞ்சாப் அரசும் பின்பற்றும் என்று முதல்வர் பகவந்த் மான் திங்கள்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :25 ஏப்ரல் 2022, 12:10 pm

DIN

அனைத்து பொருளாதாரப் பின்னணியில் உள்ள மாணவர்களும் தரமான கல்வியைப் பெறும் தில்லியின் கல்வி மாதிரியை பஞ்சாப் அரசும் பின்பற்றும் என்று முதல்வர் பகவந்த் மான் திங்கள்கிழமை தெரிவித்தார். 

இரண்டு நாள் பயணமாக தனது மூத்த அதிகாரிகளுடன் தில்லிக்கு வந்துள்ளார் மான். தேசிய தலைநகரில் உள்ள சுகாதார நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்குச் சென்று "தில்லி மாதிரியை" புரிந்துகொண்டு அதை மாநிலத்தில் பின்பற்ற உள்ளார். 

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணைத் தலைவர் மணீஷ் சிசோடியா ஆகியோர் சிராக் என்கிளேவில் உள்ள தில்லி அரசுப் பள்ளிக்கு முதல்வர் மான்-வுடன் சென்றனர்.

கல்வி முறையில் ஏற்பட்டுள்ள புரட்சி நாடு முழுவதும் விவாதிக்கப்படுகிறது. பணக்கார மற்றும் ஏழை பின்னணியில் உள்ள மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து தரமான கல்வியைப் பெறும் அதே மாதிரியை பஞ்சாபிலும் நாங்கள் பின்பற்றுவோம். ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதன் மூலம் நாடு முன்னேறும் என்று மான் கூறினார்.

நாட்டின் கல்வி முறையை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கேஜரிவால் கூறினார்.

பஞ்சாப் முதல்வருடன் பள்ளிக் கல்வி மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைகள் ஆகிய இரு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும், முக்கியமான இரண்டு துறைகளில் உள்ளீடுகளைப் பெற உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.