குருகிராமின், மனேசரின் செக்டார் 6-ல் உள்ள குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து எற்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
திங்கள்கிழமை இரவு 10.45 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு பெண் உயிருடன் எரிந்து தீக்கு இரையாகியுள்ளார். ஒரு குழந்தை உள்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி,
பலத்த காற்று காரணமாக, குப்பைக் கிடங்கில் உள்ள தீயானது அருகிலுள்ள சேரிகளிலும் மளமளவென பரவியது.
பலத்த காற்று வீசியதால், தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் இன்று காலை 10.30 மணி வரையிலும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீயை முழுமையாக அணைக்க இன்னும் மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும், குருகிராம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹரியாணா மற்றும் தில்லி முழுவதிலும் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
குடிசைப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தால், இங்கு வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களும் வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் இன்னும் அறியப்படவில்லை. மேலும் ஏற்பட்ட சேதம் குறித்து கண்டறியப்படவில்லை.
தற்போது, தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.