கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வெப்ப அலை பாதிப்பு: ஒடிசாவில் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் ரத்து

ஒடிசாவில் நிலவும் வெப்பம் காரணமாக, ஒடிசா அரசு நாளை முதல் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளின் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :26 ஏப்ரல் 2022, 9:45 am

DIN

புவனேஸ்வர்: ஒடிசாவில் நிலவும் வெப்பம் காரணமாக, ஒடிசா அரசு நாளை முதல் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளின் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒடிசாவின் உயர்கல்வித் துறையின் கீழ் வரும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளின் வகுப்புகள் ஏப்ரல் 27 முதல் மே 2 வரை ரத்து செய்யப்படும் என்று உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் சாஸ்வத் மிஸ்ரா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தேர்வு, மதிப்பீடு, நிர்வாகப் பணிகள், ஆராய்ச்சிப் பணிகள் போன்ற பிற செயல்பாடுகள் வழக்கம் போல் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று முதல் ஐந்து நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாநிலத்தில் கடுமையான வெப்பம் நிலவுவதால், ஏப்ரல் 30ஆம் தேதி வரை மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களை மூடுவது என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஏற்கனவே தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால், அவை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் இழந்த கல்வி நாள்களை ஈடுசெய்ய, ஜூன் 1 முதல் ஜூன் 16 வரை குறுகிய காலத்திற்கு கல்லூரிகள் மற்றும் பொது பல்கலைக்கழகங்களுக்கு கோடை விடுமுறையை ஒடிசா அரசு அறிவித்து இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.