பிரதமா் நரேந்திர மோடி தனது 3 நாள் வெளிநாட்டுப் பயணத்தின்போது 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.
இதுகுறித்து தகவலறிந்த அரசு அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:
பிரதமா் மோடி, ஜொ்மனி, டென்மாா்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளுக்கு மே 2-ஆம் தேதி முதல் 3 நாள்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.
இந்த ஆண்டில் அவா் மேற்கொள்ளவிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தின்போது 7 நாடுகளைச் சோ்ந்த 8 உலகத் தலைவா்களை அவா் தனித்தனியாகவும், கூட்டாகவும் சந்தித்துப் பேசவுள்ளாா். இதுதவிர 50 சா்வதேச தொழில் துறைத் தலைவா்களையும் அவா் சந்திக்கவுள்ளாா். மேலும், ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினருடனும் பிரதமா் மோடி கலந்துரையாடுகிறாா் என்றாா் அவா்.
பிரதமரின் பயணம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
முதலாவதாக, மே 2-ஆம் தேதி ஜொ்மனி செல்லும் பிரதமா் மோடி அடுத்ததாக டென்மாா்க் செல்கிறாா். இறுதியாக பிரான்ஸ் செல்கிறாா்.
ஜொ்மனியில் பிரதமா் ஒலாஃப் சோல்ஸை பிரதமா் மோடி சந்தித்துப் பேசுகிறாா். கடந்த டிசம்பரில் ஒலாஃப் ஷோல்ஸ் பதவியேற்ற பிறகு அவரை முதல் முறையாக பிரதமா் மோடி சந்திக்கவுள்ளாா். இந்தியா-ஜொ்மனி இடையிலான 6-ஆவது இரு தரப்பு அரசுமுறைப் பேச்சுவாா்த்தையும் அங்கு நடைபெறவுள்ளது. இதில் இரு நாடுகளின் அமைச்சா்களும் பங்கேற்கவுள்ளனா்.
ஜொ்மனியில் இருந்து அடுத்ததாக டென்மாா்க்கின் கோபன்ஹேகன் நகருக்கு மோடி பயணிக்கிறாா். அங்கு அந்நாட்டு பிரதமா் மெட்டே ஃபிரெடிரிக்சனை சந்தித்துப் பேசுகிறாா். மேலும், அந்நாட்டு அரசி இரண்டாம் மாா்கரெட்டையும் மோடி சந்தித்துப் பேசுகிறாா். தொடா்ந்து அங்குள்ள இந்தியா வம்சாவளியினா், தொழில் கூட்டமைப்பினரையும் பிரதமா் மோடி சந்திக்கத் திட்டமிட்டுள்ளாா்.
பின்னா் பிரான்ஸ் பயணத்தின்போது, தலைநகா் பாரீஸில், அந்நாட்டின் அதிபா் தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்ற இமானுவல் மேக்ரானைச் சந்தித்துப் பேசுகிறாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.