கேரளத்தில் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் இதர 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இடுக்கியில் இரவு நேர பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கல்லாறு - பொன்முடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதையடுத்து, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.