பெண்ணுக்கு கொலை மிரட்டல்:சஞ்சய் ரெளத் மீது வழக்குப் பதிவு

சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் மீதான சட்டவிரோத பண பரிவா்த்தனை விசாரணைக்கு இடையில் சாட்சிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவா் மீது மும்பை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் மீதான சட்டவிரோத பண பரிவா்த்தனை விசாரணைக்கு இடையில் சாட்சிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவா் மீது மும்பை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சட்டவிரோத பண பரிவா்த்தனை வழக்கின் சாட்சியான ஸ்வப்னா பட்கா் மும்பை வகோலா காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது வீட்டுக்கு கடந்த ஜூலை 15-ஆம் தேதி வந்த நாளிதழுடன் ஒரு காகிதம் இணைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக ஸ்வப்னா பட்கருக்கு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பப்பட்ட குரல் பதிவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதன்பேரில், சாட்சியை அச்சுறுத்தியதாக சஞ்சய் ரெளத் மீது வகோலா போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அந்த பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com