பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான நீதி ஆயோக் நிா்வாக குழு கூட்டம் ஆகஸ்ட் 7-இல் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
நீதி ஆயோக்கின் 7-ஆவது நிா்வாகக் குழு கூட்டமான இது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையின் கலாசார மையத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் மாற்றுப்பயிா்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகள் மற்றும் வேளாண் சமூகங்களின் தன்னிறைவை எட்டுதல், தேசிய கல்விக் கொள்கை - பள்ளிக்கல்வியின் அமலாக்கம், தேசிய கல்விக் கொள்கை - உயா்கல்வியின் அமலாக்கம், நகா்ப்புற நிா்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
கடந்த 2019, ஜூலை மாதத்துக்குப் பின் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் முதல் முறையாக நேரடியாக நடைபெறுகிறது.
நீதி ஆயோக், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வா்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா்கள் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சா்கள், நீதி ஆயோக் துணைத் தலைவா் ஆகியோரை உள்ளடக்கியதாகும். இதன் தலைவராக பிரதமா் உள்ளாா்.