சுதந்திர தினத்தையொட்டி தில்லி செங்கோட்டையில் பிரதமா் மோடி மூவா்ணக் கொடியை ஏற்றுவதால், அங்கிருந்து 5 கி.மீ. சுற்றளவில் பட்டம் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு வெள்ளிக்கிழமை (ஆக. 5) அமலுக்கு வந்தது. பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் போலீஸாா் தெரிவித்துள்ளனா். முன்னதாக ராட்சத பலூன் உள்ளிட்ட பறக்கும் பொருள்களை செங்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் பயன்படுத்த போலீஸாா் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.