புது தில்லி: இந்திய கோடீஸ்வரர்களில் முன்னணியில் இருக்கும் முகேஷ் அம்பானி, இரண்டாவது ஆண்டாக கடந்த நிதியாண்டிலும் தனக்கு மாதச் சம்பளம் வேண்டாம் என்று அறிவித்துவிட்டதாக ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
அதாவது, ரிலையன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த 2020- 2021ஆம் நிதியாண்டுக்கான ஆண்டறிக்கையில், முகேஷ் அம்பானியின் ஊதியம் என்ற இடத்தில் இல்லை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் நிர்வாகி மற்றும் மேலாண் இயக்குநர் முகேஷ் அம்பானி, கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கரோனா பேரிடர் காரணமாக ஏற்பட்ட பல்வேறு இழப்புகளை ஈடுகட்டும் வகையில், தாமாக முன் வந்து, தனக்கு மாத ஊதியம் வேண்டாம் என்று அறிவித்திருந்தார். அந்த வகையில் அவர் 2021 - 22ஆம் நிதியாண்டிலும் தனது ஊதியத்தை விட்டுக் கொடுத்துள்ளார்.
இவ்விரு நிதியாண்டுகளிலும் முகேஷ் அம்பானி, மாத சலுகைப் படிகள் உள்ளிட்ட எதையும் பெறவில்லை. மேலும், தான் நிறுவனத்தின் நிர்வாகி மற்றும் மேலாண் இயக்குநராக பணியாற்றுவதற்காக எந்த ஊதியத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை.
கடந்த 11 ஆண்டுகளாக தனக்கு ஊதிய உயர்வை செய்து கொள்ளாமல், தொடர்ந்து 11 ஆண்டுகளாக வெறும் ரூ.15 கோடியை மட்டுமே ஊதியமாகப் பெற்று வந்தார் முகேஷ் அம்பானி. இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த ஊதியத்தையும் விட்டுக்கொடுத்துவிட்டார்.
இதே நிறுவனத்தில் பணியாற்றும் இவரது உறவினர்களான நிகில் மற்றும் ஹைதல் மேஸ்வானி ஆகியோருக்கான ஊதியமும் மாற்றம் செய்யப்படாமல் ரூ.24 கோடியாகவே உள்ளது. ஆனால் ரூ.17.28 கோடி தரகுத் தொகையாக சேர்க்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வி.பி. சிங்: வரலாறு நினைவுகொள்ள வேண்டிய ஓர் இந்தியப் பிரதமர்

சிலிண்டர் முதல் ஆதார் வரை..! ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!

சிக்க வைத்த 238 மணி நேர போன் பேச்சு, சிசிடிவி காட்சி! புணே கொலையில் காதலனுடன் சிக்கிய இளம்பெண்ணின் சூப்பர் பிளான்!
என்எல்சி பங்கு விற்பனை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP



