பாட்னா: அண்மையில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து புதிய ஆட்சியமைத்த பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தனக்கு பிரதமர் பதவி மீதெல்லாம் ஆசையில்லை, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை மட்டுமே செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பிருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எனது கூப்பிய கரங்களுடன் இதைச் சொல்கிறேன். எனக்கு அதுபோன்ற எந்த எண்ணமும் இல்லை.. அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து வீறுநடை போட வேண்டும் என்பதற்காகவே மட்டுமே முயற்சித்து வருகிறேன். அவ்வாறு நடந்தால் அது மிகவும் நன்றாக இருக்கும் என்று நிதீஷ் குமார் கூறினார்.
பிகார் முதல்வரான நிதீஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறி, பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, புதன்கிழமை ஆர்ஜேடி கூட்டணியில் பிகார் மாநிலத்தின் முதல்வராக 8வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக தோ்தல் அறிக்கை திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஆதரவு வேண்டும்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

சிதம்பரத்தில் இன்று அம்பேத்கா் மாளிகை அமைக்க அடிக்கல்

கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்! - கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


