திரிபுராவின் மஹாராஜ் பிர் பிர்காம் கல்லூரியில் நடைபெறும் பவள விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்வார் என்று கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
புதன்கிழமை நிகழ்ச்சிக்கான ஆயத்த கூட்டத்திற்குத் தலைமை வகித்த நாத், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகை சிறப்பானதாக இருக்கும் என்றார்.
செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தின விழாவைக் குறிக்கும் வகையில் பேரணி நடத்தப்படும். மேலும் மாநில அளவிலான ஆசிரியர் தின நிகழ்ச்சியும் எம்பிபி கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.
மாநிலத்தின் பழமையான கல்லூரியின் 75-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக ஓவியப் போட்டி, கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி, கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.
செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் எஸ்என் ஆர்யா மற்றும் முதல்வர் மாணிக் சாஹா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று அவர் கூறினார்.
செப்டம்பர் 9 ஆம் தேதி எம்பிபி கல்லூரியின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு முதல்வர் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.