எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பாஜகவினரின் சர்ச்சைப் பேச்சு: இதுவே கடைசியாக இருக்க வேண்டும் -ஓவைசி

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும்: அசாதுதீன் ஓவைசி 

News image

அசாதுதீன் ஓவைசி (கோப்புப் படம்)

Updated On :24 ஆகஸ்ட் 2022, 5:09 pm IST

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி  அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்

தெலங்கானாவில் கோஷாமால் தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ராஜா சிங், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களைப் பேசி விடியோ ஒன்றை பதிவிட்டார். 

இந்த விடியோவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நூபுர் சர்மாவின் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டதாகக் கூறி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ராஜா சிங்கை தெலங்கானா காவல் துறையினர் கைது செய்தனர்.  எனினும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில் இது குறித்து பேசிய ஹைதராபாத் எம்.பி. ஓவைசி, ராஜா சிங்கை நீதிமன்றம் நேற்று விடுதலை செய்வதாக அறிவித்தது. மாநில அரசும், காவல் துறையும் பிரச்னைகளை சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அவர் அவதூறாகப் பேசி விடியோ பதிவிட்டுள்ளார். இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து ராஜா சிங் மீது கடும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுவே எங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. 

ராஜா சிங்கை காவல் துறையினர் தங்கள் காவலில் எடுக்க வேண்டும். அவரது குரலை ஆய்வுக்கு உட்படுத்தி விடியோவில் பேசியதை உறுதிப்படுத்தி ஆவணப்படுத்த வேண்டும். இதன் மூலம் ராஜா சிங் மீதான குற்றச்சாட்டு வலுவடையும். இது போன்று முட்டாள் தனமாக பேசுவது இதுவே அவர்களுக்கு கடைசியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.