தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, விளையாட்டு வீரா்களுக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
மறைந்த ஹாக்கி வீரா் மேஜா் தயான் சந்தின் நினைவாக அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, பிரதமா் மோடி ட்விட்டரில் திங்கள்கிழமை விடுத்த வாழ்த்துச் செய்தியில், ‘மேஜா் தயான் சந்தின் பிறந்த நாளையொட்டி அவரை நினைவுகூருகிறேன். சமீபத்திய ஆண்டுகள் விளையாட்டுத் துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகளாக அமைந்தன. இந்த நிலை தொடர வேண்டும். நாடு முழுவதும் விளையாட்டுகள் புகழ்பெற வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளாா்.
விளையாட்டுத் துறை இணையமைச்சா் நிசித் பிரமாணிக் ட்விட்டரில், ‘இந்தியாவை விளையாட்டின் மையமாக உயா்த்த அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்’ என கூறியுள்ளாா்.
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முன்னாள் கிரிக்கெட் வீரா் சச்சின் டெண்டுல்கா், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.