புதுதில்லி: வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்தவும், வலுவான வங்கிகளை உருவாக்கவும் பொதுத் துறை வங்கிகளின் இணைப்பு உதவியதாக மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த அவர் தெரிவித்ததாவது:
"வங்கிகள் ஒருங்கிணைப்பின் நோக்கமானது, போட்டித்தன்மையுள்ள வலுவான வங்கிகளை உருவாக்குவதாகும். இதன் பலன்களாக, இணைக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான கிளைகள் மற்றும் ஏடிஎம்களுக்கான அணுகலைப் பெறுகின்றனர்.
வங்கிகள் ஒருங்கிணைப்பால் பெரிய அளவிலான கடன்களை வழங்கவும், வங்கிகளை மறுசீரமைக்கவும், வங்கிகளின் செயலாக்க மையங்களைக் கட்டுப்படுத்தவும் வங்கிகள் இணைப்பு உதவியது" என்றார்.