பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ரூ.2 சிப்ஸ் பாக்கெட்டில் ரூ.500 நோட்டு? அதிர்ஷ்டத்தை சோதிக்க போட்டி போட்டு சிப்ஸ் வாங்கிய பெற்றோர்கள்!

கர்நாடகத்தில் ரூ.2 சிப்ஸ் பாக்‍கெட்டுகளில் ரூ.500 நோட்டுகள் இருந்ததால் அதிர்ஷ்டத்தை சோதிக்க கடைகளில் போட்டி போட்டுக்கொண்டு சிப்ஸ் பாக்கெட் வாங்குவதற்கு சிறுவர்கள் முதல் பெற்றோர்களின் கூட்டம் அலைமோத

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:37 pm IST


கர்நாடகத்தில் ரூ.2 சிப்ஸ் பாக்‍கெட்டுகளில் ரூ.500 நோட்டுகள் இருந்ததால் அதிர்ஷ்டத்தை சோதிக்க கடைகளில் போட்டி போட்டுக்கொண்டு சிப்ஸ் பாக்கெட் வாங்குவதற்கு சிறுவர்கள் முதல் பெற்றோர்கள் கூட்டம் அலைமோதியது. 

சிப்ஸ் மற்றும் குர்குரே போன்ற பாக்கெட்டில் உள்ள தின்பண்டங்கள் சிறு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. வீட்டின் பக்கத்து பெட்டிக்கடை முதல் பள்ளிக்கு வெளியே அமர்ந்திருக்கும் பாட்டி கடை வரை சிறுவர்களின் கண்ணில் படும்படியாக பல வண்ணங்களில் சிப்ஸ் பாக்கெட்டுகள் தொங்குகின்றன. ரூ.1 முதல் ரூ.10 வரையிலான ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகளை வாங்கிக் கொடுக்குமாறு பெற்றோர்களை குழந்தைகள் நச்சரிக்கின்றனர். உடல் நலத்திற்கு நல்லதல்ல எனக் கூறி பெற்றோர்கள் அதனை வாங்குவதில்லை. ஆனால் தற்போது அந்த சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்க சிறுவர்கள் முதல் பெற்றோர்களின் கூட்டம் அலைமோதியது.

கர்நாடகம் மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா குன்னூர் கிராமத்தில் சிலர் வாங்கிய ரூ.2 மதிப்புள்ள சிப்ஸ்  பாக்கெட்டுகளில் ரூ.500 நோட்டுகள் இருந்துள்ளது. இதுபற்றி அறிந்ததும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கடைகளுக்கு சென்று அந்த நிறுவனத்தின் சிப்ஸ் பாக்கெட்டுகளை போட்டி போட்டிக்கொண்டு வாங்கி தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து வருகின்றனர்.  

அதாவது ஒரு நிறுவனத்தின் சிப்ஸ் பாக்கெட்டுகள் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களின் சிப்ஸ் பாக்கெட்டுகளிலும் ரூ. 500 நோட்டுகள் சிக்கியது. சிலர் வாங்கிய ஒரு சிப்ஸ் பாக்கெட்டில் மட்டும் 5 முதல் 6 ரூ.500 நோட்டுகள் இருந்துள்ளது.  ஒரு சிலருக்கு 2 முதல் 3 ரூ.500 நோட்டுகள் இருந்துள்ளது. சிப்ஸ் பாக்கெட் இருந்த ஒரு பெரிய பாக்கெட்டில் இருந்த சிப்ஸ் பாக்கெட்டில் மட்டும் சுமார் ரூ.20 ஆயிரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

குன்னூர் கிராமத்தில் உள்ள சில கடைகளில் கிடைக்கும் இந்த சிப்ஸ் பாக்கெட்டுகளில் கடந்த 5-6 நாள்களாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த குறிப்பிட்ட சிப்ஸ் பாக்கெட் முற்றிலும் விற்று தீர்ந்துள்ளது. அந்த​ கிராமத்தில் சுமார் ரூ. 30 ஆயிரத்து சிப்ஸ் மட்டும் விற்பனையாகி உள்ளது. மேலும், கடைகளில் இருந்த அனைத்து நிறுவன சிப்ஸ் பாக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளது. 

அதன்பின்பு மீண்டும் கடைகளுக்கு விற்பனைக்கு வந்த புதிய சிப்ஸ் பாக்கெட்டுகளை மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர். ஆனால் அவற்றில் அத்தகைய பணமும் எதுவும் இல்லாததால் நேற்று ஆர்வத்துடன் சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் கடந்த 5 முதல் 6 நாள்களில் மட்டும் எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். 

இதனிடையே, தங்களது நிறுவன சிப்ஸ்களை பிரபலப்படுத்த அந்த நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ரூபாய் நோட்டுகளை பரிசாக வைத்திருக்கலாம் என்றும், சிப்ஸ் பாக்கெட்டுகளில் இருந்த ரூ.500 நோட்டுகள் போலியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவை போலி நோட்டுகள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.