நீட்டிக்கப்பட்ட தூரத்தை இலக்காகக் கொண்டு தாக்கும் பிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய விமானப் படை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்தது.
இதுதொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சுகோய் 30 ராணுவ விமானத்திலிருந்து கடலில் இருக்கும் கப்பலை இலக்காகக் கொண்டு தாக்கும் பிரமோஸ் வகை ஏவுகணை சோதனை வியாழக்கிழமை வங்களா விரிகுடா கடலில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் திட்டமிட்ட இலக்கை ஏவுகணை தாக்கி அழித்தது. 400 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் இந்த வகை ஏவுகணை சோதனை இந்திய விமானப்படை, இந்திய கடற்படை, டிஆர்டிஓ, பிஏபிஎல், மற்றும் ஹெச்ஏஎல் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.