போர் விமானத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி

நீட்டிக்கப்பட்ட தூரத்தை இலக்காகக் கொண்டு தாக்கும் பிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய விமானப் படை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்தது. 
போர் விமானத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி
Published on
Updated on
1 min read

நீட்டிக்கப்பட்ட தூரத்தை இலக்காகக் கொண்டு தாக்கும் பிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய விமானப் படை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்தது. 

இதுதொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 

சுகோய் 30 ராணுவ விமானத்திலிருந்து கடலில் இருக்கும் கப்பலை இலக்காகக் கொண்டு தாக்கும் பிரமோஸ் வகை ஏவுகணை சோதனை வியாழக்கிழமை வங்களா விரிகுடா கடலில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் திட்டமிட்ட இலக்கை ஏவுகணை தாக்கி அழித்தது. 400 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் இந்த வகை ஏவுகணை சோதனை இந்திய விமானப்படை, இந்திய கடற்படை, டிஆர்டிஓ, பிஏபிஎல், மற்றும் ஹெச்ஏஎல் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com