2022-23ஆம் நிதியாண்டில் 18 லட்சம் வீடுகள் கட்டி ஏழை மக்களுக்கு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கும் முக்கிய அம்சங்கள்..
2022 - 23 ஆண்டில் 18 லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும்.
பிரதமரின் வீடுகட்டும் திட்டத்துக்கு 48,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடுத்தர மக்களின் வீட்டு வசதி திட்டங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
3.8 கோடி குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு 60 ஆயிரம் கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.