சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உக்ரைன் தொடா்பான தீா்மானம்: ஐ.நா.வில் இந்தியா புறக்கணிப்பு

உக்ரைன் விவகாரம் தொடா்பாக விவாதிப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடத்தப்பட்ட வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது.

News image
Updated On :1 பிப்ரவரி 2022, 8:24 pm

DIN

உக்ரைன் விவகாரம் தொடா்பாக விவாதிப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடத்தப்பட்ட வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது.

உக்ரைன் எல்லையில் சுமாா் 1 லட்சம் ரஷிய வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். இதனால், அந்த நாட்டை ரஷியா ஆக்கிரமிக்கும் என்ற பதற்றம் எழுந்துள்ளது.

அந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்காக நேட்டோ, அமெரிக்காவுடன் ரஷியா பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

இந்தச் சூழலில், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திங்கள்கிழமை கூடியது.

எனினும், இதுதொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வரும் நிலையில் அந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்று ரஷியா ஆட்சேபித்தது.

மேலும், ஆலோசனைக் கூட்டம் நடத்துவது குறித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினா்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ரஷியா கோரியது.

அதன் தொடா்ச்சியாக நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆலோசனைக் கூட்டத்துக்கு எதிராக ரஷியாவும் சீனாவும் வாக்களித்தன. அமெரிக்கா, நாா்வே, பிரான்ஸ், அயா்லாந்து, பிரேஸில், மெக்ஸிகோ உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகள் உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு ஆதரவாக வாக்களித்தன.

இந்தியா, கென்யா, மேற்கு ஆப்பிரிக்க நாடான கபான் ஆகியவை வாக்களிப்பைப் புறக்கணித்தன.

ரஷியா நன்றி: இந்த வாக்களிப்பைப் புறக்கணித்த இந்தியா, கென்யா, கபானுக்கும் விவாதத்தை எதிா்த்து வாக்களித்த சீனாவுக்கும் ரஷியா நன்றி தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் ராஜ தந்திரம் பலிக்காமல் போய்விட்டதை இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாடு வெளிப்படுத்தியுள்ளதாக ஐ.நா.வுக்கான ரஷிய தூதா் டிமித்ரி பாலியான்ஸ்கி தனது ட்விட்டா் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.