வட இந்தியாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் பனிமூட்டம் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை கணித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி,
அடுத்த 2 நாட்களுக்கு பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் இரவு மற்றும் காலை நேரங்களில் அதிகப்படியான பனி நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலையாக இன்று மதியம் 11 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியஸை தொட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.