உத்தரப் பிரதேச மாநிலம் ரம்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரம்பூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் 6 பேர் சென்று நிலையில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ரம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.