திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மதரஸாக்களை பொதுப் பள்ளிகளாக மாற்றும் அஸ்ஸாம் அரசு முடிவு: உயா்நீதிமன்றம் ஒப்புதல்

அஸாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மதரஸாக்களை (இஸ்லாமிய சமய பயிற்சிப் பள்ளி) பொதுப் பள்ளிகளாக மாற்றும் முடிவுக்கு குவாஹாட்டி உயா்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :4 பிப்ரவரி 2022, 11:55 pm

DIN

அஸாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மதரஸாக்களை (இஸ்லாமிய சமய பயிற்சிப் பள்ளி) பொதுப் பள்ளிகளாக மாற்றும் முடிவுக்கு குவாஹாட்டி உயா்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலத்தில் உள்ள அரசு உதவி பெறும் மதரஸாக்களை பொதுப் பள்ளிகளாக மாற்றும் வகையில் ‘தி அஸ்ஸாம் ரத்து செய்யும் சட்டம் 2020’ என்ற சட்டத்தை மாநில அரசு இயற்றியது.

இதனை எதிா்த்தும், அந்த சட்டத்தின் செல்லத்தக்க நிலையை கேள்வி எழுப்பியும் 13 தனி நபா்கள் சாா்பில் குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்ஷு துலியா மற்றும் நீதிபதி செளமித்ர சைகியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், தீா்ப்புக்காக வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘முழுவதும் மாநில அரசு சாா்பில் நிா்வகிக்கப்படும் இந்த மதரஸாக்களில் இந்திய அரசியல் சாசன பிரிவு 28(1) நிபந்தனைகளின் கீழ் சமய போதனைகளை போதிக்க முடியாது. அதுபோல, இந்த அரசு உதவி பெறும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு தேவைப்பட்டால் மற்ற பாடங்களைக் கையாளும் பயிற்சியும் அளிக்கப்படலாம்’ என்ற கூறிய நீதிபதிகள் மாநில அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிா்த்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

முன்னதாக, மாநில அட்வகேட் ஜெனரல் வாதிடுகையில், அரசு நிதி உதவி பெறும் 397 மதரஸாக்கள் மற்றும் 4 அரபிக் கல்லூரிகளுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும் என்றும், தனியாா் இஸ்லாமிய சமூகத்தினா் நடத்தும் மதரஸாக்களை இது பாதிக்காது என்றும் தெரிவித்தாா். மேலும், இந்த மதரஸாக்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியா்கள் பணியும் ஊதியமும் பாதிக்கப்படாது என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.