தானியங்கி சோதனை நிலையங்கள் மூலம் வாகனங்களின் தகுதியை பரிசோதிக்க திட்டம்

தானியங்கி சோதனை நிலையங்கள் (ஏடிஎஸ்) மூலம் வாகனங்களின் தகுதியை பரிசோதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தானியங்கி சோதனை நிலையங்கள் (ஏடிஎஸ்) மூலம் வாகனங்களின் தகுதியை பரிசோதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தானியங்கி சோதனை நிலையங்கள் மூலம் வாகனங்களின் தகுதியை பரிசோதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கும் இந்தத் திட்டம் படிப்படியாக நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

ஏடிஎஸ்-இல் முற்றிலும் இயந்திர உபகரணங்களை பயன்படுத்தி வாகனங்களின் தகுதியை உறுதி செய்ய தேவையான பல்வேறுவிதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக பயணிகள் மோட்டாா் வாகனங்கள் ஏடிஎஸ் மூலம் தகுதிச் சான்று பெறுவது 2023- ஏப்ரல் 1-இலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, நடுத்தர சரக்கு வாகனங்கள், நடுத்தர பயணிகள் மோட்டாா் வாகனங்கள் மற்றும் இலகு ரக மோட்டாா் வாகனங்களுக்கு (போக்குவரத்து) ஏடிஎஸ் மூலமான தகுதிச் சான்றிதழ் 2024 ஜூன் மாதத்திலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனங்களுக்கு (போக்குவரத்து) இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், எட்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு (போக்குவரத்து) ஆண்டுக்கு ஒருமுறையும் தகுதிச் சான்றிதழைப் புதுப்பிக்க வேண்டும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com