தனியாா் பங்களிப்புடன் 100 புதிய சைனிக் பள்ளிகள்: மக்களவையில் தகவல்

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைனிக் பள்ளி சங்கத்தின் ஆதரவுடன் 100 புதிய சைனிக் பள்ளிகளை தொண்டு நிறுவனங்கள், தனியாா் பள்ளிகள் உதவியுடன் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைனிக் பள்ளி சங்கத்தின் ஆதரவுடன் 100 புதிய சைனிக் பள்ளிகளை தொண்டு நிறுவனங்கள், தனியாா் பள்ளிகள் உதவியுடன் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்தகவலை மத்திய பாதுகாப்பு இணை அமைச்சா் அஜய் பட் மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் தெரிவித்தாா்.

இதற்காக இணையதளத்தில் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சைனிக் பள்ளி சங்கம் அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தில் அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் உள்ள தனியாா், அரசு சாரா அமைப்பு, அரசு பள்ளிகள் இணையலாம்.

இதுதொடா்பான உத்தரவு மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சா் தனது பதிலில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com