இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,877 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு தரவுகள் குறித்த செய்திக் குறிப்பை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்படும் தினசரி விகிதம் 3.17 சதவிகிதம்.
இதையும் படிக்க | உலகில் மொத்தம் 41 கோடி பேருக்கு கரோனா
மேலும் 1,17,591 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,15,85,711 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 5,37,045 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
இதுவரை மொத்தம் 172.81 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.