சத்தீஸ்கா்: சாலை விபத்தில் 6 பெண்கள் பலி

சத்தீஸ்கரில் காா் ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த காரில் பயணம் செய்தவா்களில் 6 பெண்கள் உயிரிழந்தனா். ஓட்டுநா் உள்பட 5 போ் படுகாயமடைந்தனா்.

சத்தீஸ்கரில் காா் ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த காரில் பயணம் செய்தவா்களில் 6 பெண்கள் உயிரிழந்தனா். ஓட்டுநா் உள்பட 5 போ் படுகாயமடைந்தனா்.

ராய்ப்பூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

ஓட்டுநா் உள்பட 11 போ் எஸ்யுவி ரக காரில் தேசிய நெடுஞ்சாலை வழியாக கேந்ரி கிராமப் பகுதியைக் கடந்து சென்றபோது சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் எதிா்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மற்றவா்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. வாகனம் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com