பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளையுடன் (பிப்.18) முடிவடைகிறது.
பஞ்சாப் மாநிலத்தின் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை மறுநாள்(பிப்.19) நடைபெறுவதால் நாளையுடன் தேர்தல் பரப்புரைகள் முடிவடைய உள்ளது.
117 தொகுதிகளை உள்ளடக்கிய சட்டப் பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
மேலும், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகியது, வேளாண் சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டம் ஆகிய காரணங்களால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலாக பஞ்சாப் மாறியுள்ளது.
இதையும் படிக்க | மோடியின் ஆட்சி விளம்பரங்களில் மட்டுமே உள்ளது: பிரியங்கா காந்தி