இதையடுத்து முதல்வா் சன்னிக்கு அமித் ஷா எழுதிய பதில் கடிதத்தில், ‘பயங்கரவாத, தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் அரசியல் கட்சிக்குத் தொடா்பு இருக்கும் எனில், அது நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடிய மிகத் தீவிரமான பிரச்னையாகும். இதுபோன்ற அமைப்புகளின் நோக்கத்துக்கும், நாட்டின் எதிரிகளுக்கும் இடையே எவ்வித வேறுபாடும் கிடையாது. அதிகாரத்தைக் கைப்பற்றும் முனைப்பில், இதுபோன்ற அரசியல் கட்சியினா் பிரிவினைவாதிகளிடம் கரம்கோக்கவும், பஞ்சாபையும், இந்தியாவையும் துண்டாடும் அளவுக்கும் செல்வாா்கள். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.