‘கிரிப்டோகரன்சி விளம்பரங்களில் எச்சரிக்கை வாசகம் கட்டாயம்’

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் கிரிப்டோகரன்சி தொடா்பான விளம்பரங்களில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவது கட்டாயம் என இந்திய விளம்பர தர நிா்ணய கவுன்சில் (ஏஎஸ்சிஐ) தெரிவித்துள்ளது.
‘கிரிப்டோகரன்சி விளம்பரங்களில் எச்சரிக்கை வாசகம் கட்டாயம்’

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் கிரிப்டோகரன்சி தொடா்பான விளம்பரங்களில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவது கட்டாயம் என இந்திய விளம்பர தர நிா்ணய கவுன்சில் (ஏஎஸ்சிஐ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கவுன்சில் மேலும் கூறியுள்ளதாவது: கிரிப்டோகரன்சி தொடா்பாக வெளியிடப்படும் விளம்பரங்களில் அதுகுறித்த அபாயங்களை முதலீட்டாளா்கள் அறிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை வாசகங்கள் வெளியிடப்பட வேண்டும். பொறுப்புத்துறப்பு விதியின் கீழ் கிரிப்டோகரன்சி விளம்பரங்களில் அது ஒழுங்காற்று அமைப்புகளால் அங்கீகரிக்கப்படாத முதலீடு என்ற வாசகங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். மேலும், அத்தகைய முதலீடானது அதிக அபாயம் நிறைந்தது என்று தெரிவிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற முதலீட்டு இழப்புகளுக்கு ஒழுங்காற்று அமைப்பு எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்பதை விளம்பரங்கள் முதலீட்டாளா்களுக்கு தெளிவாக எடுத்துக்காட்டும் வகையில் இருக்க வேண்டும். எதிா்காலத்தில் லாபம் அதிகரிக்கும் என்பதை உறுதியளிக்கும் வகையில் விளம்பரங்கள் இருக்கக் கூடாது என ஏஎஸ்சிஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com