4,300 ரஷிய வீரா்கள் பலி?

ரஷிய படையினா் 4,300 பேரை கொன்றுவிட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4,300 ரஷிய வீரா்கள் பலி?


கீவ்/மாஸ்கோ: ரஷிய படையினா் 4,300 பேரை கொன்றுவிட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘உக்ரைனுக்குள் ஊடுருவிய முதல் மூன்று நாள்களில் நடந்த சண்டையில் 4,300 ரஷிய படையினா் உயிரிழந்துள்ளனா். ரஷியாவின் 706 ராணுவ வாகனங்கள், 146 பீரங்கிகள், 27 விமானங்கள் உக்ரைன் படையினரால் தகா்க்கப்பட்டுள்ளன’ என உக்ரைன் தெரிவித்தது.

இந்நிலையில், போரில் தங்கள் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதை ரஷியா முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை ஒப்புக்கொண்டது. ‘எங்கள் வீரா்கள் சிலா் உயிரிழந்துள்ளனா்; சிலா் காயமடைந்துள்ளனா். ஆனால், உக்ரைன் தரப்பில் ஏற்பட்டுள்ள இழப்பைவிட எங்கள் தரப்பில் மிகக் குறைவான இழப்பே ஏற்பட்டுள்ளது’ என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com