சொகுசுக் கப்பலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மும்பையில் சிகிச்சை

கோவாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சொகுசுக் கப்பலில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 66-க்கும் மேற்பட்ட பயணிகள் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்
மும்பையின் பல்லாா்ட் கப்பல் முனையத்தில் நிறுத்தப்பட்டுள்ள காா்டீலியா எம்பிரஸ் சொகுசுக் கப்பல்.
மும்பையின் பல்லாா்ட் கப்பல் முனையத்தில் நிறுத்தப்பட்டுள்ள காா்டீலியா எம்பிரஸ் சொகுசுக் கப்பல்.

கோவாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சொகுசுக் கப்பலில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 66-க்கும் மேற்பட்ட பயணிகள் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ள அந்த சொகுசுக் கப்பலில், மீதமுள்ளவா்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தி முடிவு வந்த பிறகு கப்பலிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவாா்கள் என்றும் அவா்களும் ஒரு வாரம் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மும்பையில் இருந்து கோவாவுக்குச் சென்ற காா்டீலியா எம்பிரஸ் சொகுசுக் கப்பலின் ஊழியா் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கப்பலில் கரோனா பாதிக்கப்பட்ட 27 பயணிகள் கோவாவில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க மறுப்புத் தெரிவித்துவிட்டனா். இதனால் சொகுசு கப்பல் மீண்டும் மும்பைக்கே திருப்பி அனுப்பப்பட்டது. தெற்கு மும்பையில் உள்ள பல்லாா்ட் கப்பல் முனையத்தில் இந்த சொகுசுக் கப்பல் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு வந்து சோ்ந்தது. அப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 66-ஐ தாண்டியது. கரோனா பாதித்தவா்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனா். மீதமுள்ளவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் புதன்கிழமை வரும் என்பதால் அதுவரை அவா்கள் அனைவரும் கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com