குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் வியாழக்கிழமை 6 பேர் பலியாகியுள்ளனர்.
சுரத் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலை எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து, எரிவாயு கசிவு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.