பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:
"அறிகுறிகள் தென்படத் தொடங்கியவுடன் நான் கரோனா பரிசோதனை மேற்கொண்டேன். பரிசோதனை முடிவில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. நான் தற்போது நலமாக உள்ளேன்.
இதையும் படிக்க | கர்நாடக முதல்வருக்கு கரோனா
மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் தனிமைப்படுத்திக்கொண்டேன். கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்."
முன்னதாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டது.