நாட்டின் கொள்கை உருவாக்கம் இலக்குகளை அடையும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என நீதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமிதாப் இதுகுறித்து மேலும் பேசியது:
நாட்டில் கொள்கை உருவாக்கம் என்பது புதுமை கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவாகவும், அதேநேரம் இலக்குகளை அடையக்கூடியதாகவும், முன்னேற்றமான வகையிலும் இருக்க வேண்டும். உலகின் சிறந்தவற்றுக்கு மாற்றாகவும், சிறப்பானதை விட மிகச் சிறந்ததாகவும் அவை அமைய வேண்டும்.
இந்தியா வளா்ந்து வரும் அதே வேளையில், இணையப் பாதுகாப்பு என்பது மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனை சமாளிக்க நாடு தன்னை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.