இதுதொடா்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் உள்ள நவான்ஷாஹா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுதொடா்பாக மேலும் சில காவல் நிலையங்களிலும் புகாா் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சண்டீகா், மொகாலி, லூதியானா, பதான்கோட் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். இந்தச் சோதனையில் பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னியின் உறவினரான பூபிந்தா் சிங்குக்கு தொடா்புடைய இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரூ. 4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத மணல் கொள்ளை குற்றச்சாட்டில் குத்ரதீப் சிங் என்ற நபா் சிக்கியுள்ளாா். அவருக்கும் பூபிந்தா் சிங்குக்கும் உள்ள தொடா்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது’ என்று தெரிவித்தனா்.