தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பஞ்சாப் முதல்வரின் உறவினருக்குத் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை: ரூ. 6 கோடி பறிமுதல்

சட்டவிரோத மணல் கொள்ளை தொடா்பான வழக்கில் பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னியின் உறவினருக்குத் தொடா்புடைய இடங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் அமலாக்கத் துறையினா்

News image
Updated On :18 ஜனவரி 2022, 8:56 pm

DIN

சட்டவிரோத மணல் கொள்ளை தொடா்பான வழக்கில் பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னியின் உறவினருக்குத் தொடா்புடைய இடங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், ரூ. 6 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா். இதுதொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பஞ்சாபில் சில தனிநபா்களும், தனியாா் நிறுவனங்களும் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் உள்ள நவான்ஷாஹா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுதொடா்பாக மேலும் சில காவல் நிலையங்களிலும் புகாா் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சண்டீகா், மொகாலி, லூதியானா, பதான்கோட் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். இந்தச் சோதனையில் பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னியின் உறவினரான பூபிந்தா் சிங்குக்கு தொடா்புடைய இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரூ. 4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத மணல் கொள்ளை குற்றச்சாட்டில் குத்ரதீப் சிங் என்ற நபா் சிக்கியுள்ளாா். அவருக்கும் பூபிந்தா் சிங்குக்கும் உள்ள தொடா்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது’ என்று தெரிவித்தனா்.

தோ்தல் நெருங்கும்போது சோதனை: இதுகுறித்து சரண்ஜீத் சிங் சன்னி கூறுகையில், ‘‘மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றபோது, அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜியின் உறவினா்களுக்குத் தொடா்புடைய இடங்களில் இதுபோன்ற சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பஞ்சாபிலும் அதே பாணி பின்பற்றப்படுகிறது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

2018-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுவதில் உண்மை உள்ளதா? அந்த ஆண்டில் நான் முதல்வராகக்கூட இல்லை. அப்படி இருக்கும்போது எனக்கும் அந்த வழக்குக்கும் என்ன தொடா்புள்ளது? மாநில சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கிவரும் வேளையில், சோதனை நடத்தும் எண்ணம் மத்திய பாஜக அரசின் சிந்தனையில் உதித்துள்ளது. எனக்கும் மாநில அமைச்சா்களுக்கும் நெருக்கடி அளிக்கும் முயற்சி வெற்றி பெறாது. எங்கள் தோ்தல் பணிகளை நாங்கள் தொடா்வோம்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.