இந்திய, சீன எல்லையான லடாக்கில் பாங்காங் ஏரி அருகே சீனா சட்டவிரோதமாக பாலம் கட்டிவருவதாக செய்தி வெளியானது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக ராகுல் காந்தி எழுப்பியுள்ளார். முன்னதாக, இதில் பிரதமர் அமைதி காப்பதாக ராகுல், ஜனவரி 4ஆம் தேதி விமர்சித்திருந்தார். இந்நிலையில், பாங்காங் ஏரியில் சீனா கட்டிவருவதாக கூறப்படும் பாலத்தை சுட்டுக்காட்டும் விதமாக ஒரு புகைப்படத்தை ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "சீனா, நம் நாட்டில் சட்ட விரோதமாக பாலம் கட்டிவருகிறது. இதில், பிரதமர் அமைதி காப்பதால் சீன ராணுவத்தின் அணுகுமுறை அதிகரித்துள்ளது. இந்த பாலத்தை திறந்து வைக்க பிரதமர் செல்றுவிடக்கூடாது என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பட்ஜெட்: பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்
பாங்காங் ஏரி அருகே கட்டப்பட்டுள்ள பாலம், இரு கரையோரத்திலும் ராணுவத்தை விரைந்து குவிக்க சீனாவிற்கும் உதவுகிறது.