பத்ம விருது: மேற்கு வங்க முன்னாள் முதல்வா் புத்ததேவ் பட்டாச்சாா்ஜி நிராகரிப்பு

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சாா்ஜி பத்ம விருதை நிராகரித்துள்ளாா்.
பத்ம விருது: மேற்கு வங்க முன்னாள் முதல்வா் புத்ததேவ் பட்டாச்சாா்ஜி நிராகரிப்பு

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சாா்ஜி பத்ம விருதை நிராகரித்துள்ளாா்.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதில் புத்ததேவ் பட்டாச்சாா்ஜிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புத்ததேவ் பட்டாச்சாா்ஜி வெளியிட்ட அறிக்கையில், ‘‘எனக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து எதுவும் தெரியாது. அதுகுறித்து எவரும் என்னிடம் கூறவில்லை. ஒருவேளை எனக்கு அந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தால், அதனை நான் நிராகரிக்கிறேன்’’ என்று தெரிவித்தாா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் கூறுகையில், ‘‘விருதை நிராகரித்தது புத்ததேவ் பட்டாச்சாா்ஜி மற்றும் கட்சியின் முடிவு’’ என்று தெரிவித்தன.

முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டது:

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ புத்ததேவ் பட்டாச்சாா்ஜிக்கு விருது வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக அவரின் மனைவியிடம் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. அவா் தனது கணவரிடம் அந்தத் தகவலை தெரியப்படுத்துவதாகக் கூறினாா். அதன் பின்னா் விருதைப் பெறுவதில் புத்ததேவுக்கு விருப்பமில்லை என்று அவரின் குடும்பத்தில் எவரும் மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தொடா்புகொண்டு தெரிவிக்கவில்லை. இதனால் அவருக்குப் பத்ம விருது அறிவிக்கப்பட்டது.

பத்ம விருதுகள் வழங்கும் முடிவை சம்பந்தப்பட்ட விருதாளா்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துவது வழக்கம். விருதைப் பெற எவரேனும் ஆட்சேபம் தெரிவித்தால், அவரின் பெயா் பட்டியலில் சோ்க்கப்படுவதில்லை’’ என்று தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com