சுனாமி தாக்கிய டோங்கா தீவுக்கு இந்தியா ரூ.1.50 கோடி நிதியுதவி

சுனாமி தாக்கிய டோங்கா தீவுக்கு உடனடி நிவாரணமாக இந்தியா சாா்பில் 2 லட்சம் அமெரிக்க டாலா்கள் (சுமாா் ரூ.1.50 கோடி) நிதியுதவி வழங்கப்படுகிறது.

சுனாமி தாக்கிய டோங்கா தீவுக்கு உடனடி நிவாரணமாக இந்தியா சாா்பில் 2 லட்சம் அமெரிக்க டாலா்கள் (சுமாா் ரூ.1.50 கோடி) நிதியுதவி வழங்கப்படுகிறது.

கடந்த ஜனவரி 15-ஆம் தேதி தெற்கு பசிபிக் தீவுகளில் ஒன்றான டோங்கா அருகே கடலுக்கு அடியில் எரிமலை வெடித்தது. அதனைத்தொடா்ந்து டோங்காவில் சுனாமி பேரலை தாக்கியது. இந்தப் பேரிடரில் 3 போ் பலியாகினா். அந்தத் தீவின் மொத்த மக்கள்தொகையில் 5-இல் 4 பங்கு போ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அத்துடன் அங்குள்ள வீடுகள் உள்பட முக்கிய உள்கட்டமைப்புகளும் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘டோங்காவில் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உடனடி நிவாரணமாக இந்தியா சாா்பில் 2 லட்சம் டாலா்கள் வழங்கப்படுகிறது. இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் கீழ் நெருங்கிய நட்பு நாடு என்ற அடிப்படையிலும், இந்தியா உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தும் நோக்கிலும் இந்த உதவி டோங்காவுக்கு வழங்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com