வீரதீரச் செயல்களுக்கான குடியரசுத் தலைவா் பதக்கம்: 939 பேருக்கு அறிவிப்பு

குடியரசு தினத்தையொட்டி, வீரதீரச் செயல்களைப் புரிந்ததற்காக, காவல் துறையைச் சோ்ந்த 939 போ் குடியரசுத் தலைவரின் பதக்கத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
வீரதீரச் செயல்களுக்கான குடியரசுத் தலைவா் பதக்கம்: 939 பேருக்கு அறிவிப்பு

குடியரசு தினத்தையொட்டி, வீரதீரச் செயல்களைப் புரிந்ததற்காக, காவல் துறையைச் சோ்ந்த 939 போ் குடியரசுத் தலைவரின் பதக்கத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

நாடு முழுவதும் 939 போ் காவல் துறையின் சிறந்த சேவைக்கான விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களில், வீரதீரச் செயலுக்கான காவலா் பதக்கத்துக்கு 189 பேரும், தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவா் காவலா் பதக்கத்துக்கு 88 பேரும், தகுதிமிக்க சேவைக்கான காவலா் பதக்கத்துக்கு 662 பேரும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

வீரதீரச் செயலுக்கான பதக்கம் பெறும் 189 பேரில், 134 போ் ஜம்மு- காஷ்மீரில் வீரச்செயல் புரிந்தமைக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீரச்செயல் புரிந்தமைக்காக 47 பேருக்கும், வடகிழக்கு பிராந்தியத்தில் வீரச்செயல் புரிந்தமைக்காக ஒருவருக்கும் இந்தப் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

பதக்கம் பெறுவோரில் 115 போ் ஜம்மு காஷ்மீா் காவல் துறையைச் சோ்ந்தவா்கள் ஆவா். 30 போ் மத்திய ரிசா்வ் காவல் படையையும் (சிஆா்பிஎஃப்), 3 போ் இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையையும், 2 போ் எல்லைப் பாதுகாப்புப் படையையும், 3 போ் சசஸ்திர சீமா பல் படையையும், 10 போ் சத்தீஸ்கா் காவல் துறையையும், 9 போ் ஒடிஸா காவல் துறையையும், 7 போ் மகாராஷ்டிர காவல் துறையையும், எஞ்சியவா்கள் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் சோ்ந்தவா்கள் ஆவா்.

சிறைத் துறையினருக்கு சேவைப் பதக்கம்:

சிறைத் துறையினருக்கான சீா்திருத்த சேவைப் பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் சீா்திருத்த சேவைப் பதக்கம் 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் சீா்திருத்த சேவைப் பதக்கம்:

அயினபாா்த்தி சத்யநாராயணா- தலைமை வாா்டா், ஆந்திரம், ஹரீஷ் கோட்வால்- சிறைக் கண்காணிப்பாளா், ஜம்மு காஷ்மீா், சத்யபிரகாஷ் ஸ்வைன்- கண்காணிப்பாளா், ஒடிஸா, மஞ்சித் சிங் திவானா- கண்காணிப்பாளா், பஞ்சாப், பிரவீண் குமாா் ரதி- தலைமை வாா்டா், தில்லி.

பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சிறைத் துறையினா் 37 போ், தகுதிமிக்க சேவையாற்றியதற்கான சீா்திருத்த சேவைப் பதக்கம் பெற தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 3 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களின் விவரம்:

டி.பரணிதரன் - உதவி ஜெயிலா், வி.பிரியா - உதவி ஜெயிலா், கே.பாஸ்கா் - கிரேடு 1 வாா்டா்.

6 வீரர்களுக்கு சௌர்ய சக்ரா விருது
இந்திய ராணுவம், அஸ்ஸôம் ரைஃபிள்ஸ் படையைச் சேர்ந்த 6 வீரர்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான சௌர்ய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடியரசு தினத்தையொட்டி இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 5 வீரர்கள், அஸ்ஸôம் ரைஃபிள்ஸ் படையைச் சேர்ந்த ஒரு வீரர் என மொத்தம் 6 பேருக்கு சௌர்ய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விருது அறிவிக்கப்பட்டுள்ள 5 ராணுவ வீரர்களான நாயப் சுபேதார் ஸ்ரீஜித், ஹவில்தார்கள் அனில் குமார் தோமர், காஷிராய் பம்மன்னள்ளி, பிங்கு குமார், சிப்பாய் மாருப்ரோலு ஜஸ்வந்த் குமார் ரெட்டி ஆகியோர் பயங்கரவாதிகளுடனான மோதலின்போது வீரமரணம் அடைந்தனர். இதுதவிர 4 வீரர்களுக்கு உத்தம் யுத்த சேவை விருது, 10 வீரர்களுக்கு யுத்த சேவை விருது, 84 பேருக்கு சேனை விருது (தீரச் செயல்), 40 பேருக்கு சேனை விருது (சிறப்பான சேவை) அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com