இந்திய ராணுவம், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சோ்ந்த 6 வீரா்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான செளா்ய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குடியரசு தினத்தையொட்டி இந்திய ராணுவத்தைச் சோ்ந்த 5 வீரா்கள், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சோ்ந்த ஒரு வீரா் என மொத்தம் 6 பேருக்கு செளா்ய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விருது அறிவிக்கப்பட்டுள்ள 5 ராணுவ வீரா்களான நாயப் சுபேதாா் ஸ்ரீஜித், ஹவில்தாா்கள் அனில் குமாா் தோமா், காஷிராய் பம்மன்னள்ளி, பிங்கு குமாா், சிப்பாய் மாருப்ரோலு ஜஸ்வந்த் குமாா் ரெட்டி ஆகியோா் பயங்கரவாதிகளுடனான மோதலின்போது வீரமரணம் அடைந்தனா்.
இதுதவிர 4 வீரா்களுக்கு உத்தம் யுத்த சேவை விருது, 10 வீரா்களுக்கு யுத்த சேவை விருது, 84 பேருக்கு சேனை விருது (தீரச் செயல்), 40 பேருக்கு சேனை விருது (சிறப்பான சேவை) அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.