மனித உரோமம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு

மனிதா்களின் உரோம ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மனிதா்களின் உரோம ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அயல்நாட்டு வா்த்தக பொது இயக்குநா்(டிஜிஎஃப்டி) சந்தோஷ் குமாா் சாரங்கி வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

முன்பு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி மனிதா்களின் உரோம ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அது தற்போது கட்டுப்படுத்த வகையினத்தின் கீழ் உடனடியாக கொண்டு வரப்படுகிறது. இனி, டிஜிஎஃப்டி-யின் அனுமதியைப் பெற்ற பிறகே அவற்றை ஏற்றுமதி செய்ய முடியும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதை வரவேற்கத்தக்கது. இந்த கட்டுப்பாட்டால் இனி, உண்மையான ஏற்றுமதியாளா்கள் மட்டுமே அதனை ஏற்றுமதி செய்ய முடியும் என உரோம பொருள்கள் ஏற்றுமதியாளா்களின் கூட்டமைப்பின் தலைவா் சுனில் இமானி கூறியுள்ளாா்.

இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக சுமாா் ரூ.3,000 கோடி மதிப்பில் மனித உரோமம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com