உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ’ஏஎல்எச் எம்கே 3’ முன்னேறிய இலகுரக ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது.
பெங்களூரு ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஏஎல்எச் எம்கே 3 புதிய ரக ஹெலிகாப்டர்கள் இன்று முறைப்படி போர்ட்பிளேரில் உள்ள ஐஎன்எஸ் உத்க்ரோஷ் ராணுவத் தளத்தில் சேர்க்கப்பட்டன. இதனை, அந்தமான் - நிக்கோபர் ராணுவப் பிரிவின் லெப்டினண்ட் ஜெனரல் அஜய் சிங் பெற்றுக்கொண்டார்.
ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஏஎல்எச் ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திற்கு தயாரித்துள்ளது. அதில் ஏஎல்எச் எம்கே 3 ரக ஹெலிகாப்டர் அதிநவீன வசதி கொண்டது.