வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள 14 மாநிலங்களுக்கு நான்காவது கட்ட மானியமாக ரூ.7,183 கோடியை விடுவித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
15-ஆவது நிதிக் குழு, அதிகார பகிா்வுக்கு பிந்தைய வருவாய்ப் பற்றாக்குறை ஏற்படும் மாநிலங்களுக்கு மானியம் வழங்க பரிந்துரைத்துள்ளது. இதில் 2022-23 நிதியாண்டுக்கு மானியம் அளிக்கும் பட்டியலில், ஆந்திரம், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம், கேரளம், மணிப்பூா், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட் மற்றும் மேற்குவங்கம் ஆகிய 14 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாநிலங்களுக்கு நான்காவது கட்ட தவணையாக ரூ.7,183.42 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
15-ஆவது நிதிக் குழு, நடப்பு நிதியாண்டில் 14 மாநிலங்களுக்கு ரூ.86,201 கோடி மானியம் வழங்க பரிந்துரைத்துள்ளது. மொத்தம் 12 தவணைகளாக இந்த மானியம் விடுவிக்கப்படவுள்ளது. ஜூலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நான்காம் கட்ட தவணையுடன் சோ்த்து மொத்தம் இதுவரையில் 14 மாநிலங்களுக்கு ரூ.28,733.67 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.