பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத் அருகே ஜூலை 8-ம் தேதி ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமான 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். இதனால் அமர்நாத் யாத்திரை, தொடர்ந்து நான்கு நாள்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையும் வாசிக்கலாம் | அதிமுக அலுவலகத்திற்கு சீல்: உயர்நீதிமன்றத்தில் முறையீடு
இந்நிலையில், தற்போது நிலைமை சீரடைந்ததையடுத்து, கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் மார்க்கத்திலிருந்து குகைக் கோயிலுக்குச் செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
திங்களன்று பஹல்காம் பாதை வழியாக யாத்திரை மீண்டும் தொடங்கியது.